English
அறிவியலை தற்காக்க
ஏப்ரல் 22, 2017 அன்று ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் உலகம் முழுவது அறிவியலுக்காக "March for Science" என்ற பேனரின் கீழ் அணிதிரண்டனர். இந்தியாவிலுருக்கும் அறிவியல் ஆர்வலர்களாகிய நாம் இதை தவற விட்டுவிட்டோம். எனவே விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்சியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இணைந்து இந்தியாவில் அறிவியலுக்காக "March For Science" என்று அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநில தலைநகர்களிலும் அணிதிரள மக்கள் தயாராகின்றனர் என்று இங்கிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. புதுச்சேரியில் வசிக்கும் நாமும் இதில் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும்.
போதிய நிதி ஒதுக்குதல்
GDP-யில் குறைந்தபட்சம் 3% சதவீதமாவது அறிவியல் மற்றும் தொழிழ்நுட்ப ஆராய்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். மற்றும் 10% சதவீதம் அறிவியல் கல்விக்கும் ஒதுக்க வேண்டும்.
அறிவியல் பார்வையை வளர்தெடுத்தல்
போலி அறிவியல், பொய்யான செய்திகள், வதந்திகள் மற்றும் மதம் சார்ந்த வெறுப்புணர்ச்சியை தூண்டும் கருத்துக்களை பரப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு அறிவிய மனப்பான்மையை, மனித நேயத்தையும், எதையும் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் பார்வையையும் அரசியல் அமைப்புச் சட்டம் 51 பிரிவு A-யின் படி வளர்க்க வேண்டும்.
ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல்
பாட புத்தகங்களிலும் பள்ளிகளிலும் ஆதாரங்களின் அடிப்படையில் நிருவப்பட்ட அறிவியல் கருத்துக்களை மட்டுமே இடம்பெறச் செய்ய வேண்டும். அரசின் கொள்கைகளிலும் ஆதாரங்களின் அடிப்படையிலான அறிவியல் முடிவுகள் மூலம் தீர்வு காண முயல வேண்டும்.