English

அறிவியலை தற்காக்க

ஏப்ரல் 22, 2017 அன்று ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் உலகம் முழுவது அறிவியலுக்காக "March for Science" என்ற பேனரின் கீழ் அணிதிரண்டனர். இந்தியாவிலுருக்கும் அறிவியல் ஆர்வலர்களாகிய நாம் இதை தவற விட்டுவிட்டோம். எனவே விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்சியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இணைந்து இந்தியாவில் அறிவியலுக்காக "March For Science" என்று அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநில தலைநகர்களிலும் அணிதிரள மக்கள் தயாராகின்றனர் என்று இங்கிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. புதுச்சேரியில் வசிக்கும் நாமும் இதில் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அறிவியலுக்காக!. அறிவியல் ஆராய்சியாளர்களின் சில கோரிக்கைகள் கீழே.

அறிவியலுக்காக குரல் கொடுக்க உங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம்

உங்களுக்கு அறிவியல் பிடிக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உண்மையை, இயற்கையை, பிரபஞ்த்தைப் பற்றி சோதனையின் அடிப்படையில் கண்டறிய உதவும் ஒரு வழிமுறையாக அது உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது அறிவியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக உங்களுக்கு புடிக்கலாம். இப்படி எந்த காரணத்திறாக உங்களுக்கு அறிவியல் பிடித்திருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.